காலி முகத்திடல் அமைதியின்மை - சமூக ஊடக ஆதரவுடன் சந்தேக நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலி முகத்திடல் அமைதியின்மை - சமூக ஊடக ஆதரவுடன் சந்தேக நபர் கைது!

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் ஒருவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

43 வயதான சந்தேகநபர் ஹோகந்தர பிரதேசத்தில் மறைந்திருந்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஏனைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுடன் ஸ்கூட்டரில் காலி முகத்திடலுக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மிரிஹான போராட்டத்தின் போது, ​​பின்னர் எரிக்கப்பட்ட இராணுவ பேருந்தை ஓட்டிச்சென்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்னால் நிறுத்தியதாக நம்பப்படுவதாகவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்த நபர் போராட்டக்காரர்களுக்கு எதிராக பேசியதையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)




காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸ் மா அதிபர், விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி மற்றும் பொலிஸ் விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.