தம்மை சந்திக்க எந்தவொரு அரசியல்வாதிக்கும் அனுமதி இல்லை! மல்வத்தை பீட மகாநாயக்க தேரர் அதிரடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தம்மை சந்திக்க எந்தவொரு அரசியல்வாதிக்கும் அனுமதி இல்லை! மல்வத்தை பீட மகாநாயக்க தேரர் அதிரடி!


மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர், திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், தம்மைச் சந்திக்க எந்தவொரு அரசியல்வாதியும் அனுமதிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளார். 

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இலங்கையிலுள்ள மூன்று பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகளினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு இதுவரை பொறுப்பான எந்தவொரு நபரும் பதிலளிக்காத காரணத்தினால் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். 

நாட்டின் அரசியல் தலைமைத்துவம் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்கி பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணாவிட்டால் முப்படைகளின் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நான்கு யோசனைகளை சமர்ப்பித்த மாநாயக்க தேரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.