எதிர்வரும் மாதங்களில் நாட்டின் நிலைமை இது தான் - அமைச்சர் அலி சப்ரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் மாதங்களில் நாட்டின் நிலைமை இது தான் - அமைச்சர் அலி சப்ரி

தற்போதைய நிலைமைக்கு ஏற்ப அரசாங்கத்திற்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச கடன் தொகையை எட்டியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் 2.9 ட்ரில்லியன் மட்டுமே கடனாகப் பெற முடியும் எனவும் அந்த வரம்பை நான்கு ட்ரில்லியன்களாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடன் வரம்பை அதிகரிக்காவிட்டால் அடுத்த மாதம் முதல் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கடன் வரம்பை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் தேவைப்பட்ட போதிலும், அரசாங்கம் தற்போது அவ்வாறு செய்ய முடியாத நிலையில் இருப்பதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.