பாராளுமன்றத்தில் கண் கழங்கிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்றத்தில் கண் கழங்கிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் நேற்று (18) பாராளுமன்றத்தில் பேசும் போது அவ்வப்போது அழுது புலம்பியவாறு காணப்பட்டார்.

தற்போது தன்னிடம் மெத்தை மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறினார்.

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே திரு. லன்சா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அண்மைய வன்முறைகளால் தான் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு இழப்பீடு கோராமல் நியாயமான விசாரணையை கோருவதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவங்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ ஈடுபடவில்லை எனவும், சம்பவத்துடன் தொடர்புடைய குழு தொடர்பில் உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்படும் எனவும் திரு.லன்சா தெரிவித்தார்.

தந்தை, தாத்தாவிடம் இருந்து பெற்றதையும், குறித்த கும்பலின் வன்முறைச் செயல்களால் சம்பாதித்ததையும் இழந்துவிட்டதாகவும், ஆனால் அதை உணர்ந்து கொண்டதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் நாடு நாசமாகிவிடும் என்றும் அவர் கூறினார்.

பல நண்பர்கள் தமக்கு உதவ முன்வந்துள்ளதாகவும், பிரபல ஹோட்டல் அதிபர் ஒருவர் தன்னை தனது விடுதியில் தங்குமாறு அழைத்ததாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெரும் பொருளாதார நெருக்கடியில் ஒருவரையொருவர் கொன்றால் நாடு நாசமாகிவிடும் என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.