வரகாபொல விபத்தில் நான்காவதாக நிஹாரா டீச்சரும் காலமானார் - தகவல் பேருவளை ஹில்மி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வரகாபொல விபத்தில் நான்காவதாக நிஹாரா டீச்சரும் காலமானார் - தகவல் பேருவளை ஹில்மி

மூன்று மாதங்களுக்கு முன்னர் வரகாபொல பகுதியில் நடந்த முச்சக்கர வண்டி விபத்தொன்றில் பேருவலையில் வசித்த கெகிராவயைச் சேர்ந்த முன்னாள் அதிரடிப்படை வீரரும், பின்னர் பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய, அலவி மெளலானா, ரவுப் ஹகீம் ஆகியோரின் மெய்ப்பாதுகாப்பாளராக கடமையாற்றிய முகம்மது இக்பால், அவரது மகன், பேரப்பிள்ளை ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

இவர்களின் நான்காவது நபராக முகம்மது இக்பாலின் மனைவியான நிஹாரா டீச்சர் முன்று மாதங்களாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நே‌ற்று 23 திகதி காலமானார்.

திக்வல்லையை பிறப்பிடமாகவும் மிக நீண்டகாலமாக பேருவலையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் பேருவளை நழீம் ஹாஜியார் மத்திய கல்லூரியின் பழைய மாணவியும் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற, பட்டதாரி ஆசிரியையும் ஆவார். இவர் பேருவளை மக்களினதும், மாணவ, மாணவியரினதும் மனதை வென்ற நற்குணங்கள் உள்ள சிறந்த ஆசிரியை.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பேருவலையில் நடைபெறு‌ம். 

அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து, அவரது நற்காரியங்களை ஏற்றுக் கொண்டு, ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும்

சுவர்கத்தை வழங்குவானாக.

( தகவல் பேருவளை ஹில்மி)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.