புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஜனாதிபதி தயார் - ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஜனாதிபதி தயார் - ஜனாதிபதி

புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஜனாதிபதி தயார் என மக்கள் விசேட அறிக்கையின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

நாட்டில் தற்போது தடைப்பட்டுள்ள ஆட்சி முறை செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு இந்த வாரத்திற்குள் புதியதொரு அரசாங்கத்தை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலே இந்த விடயத்தை தெரிவித்தார்

🔵 நமது Telegram குழுமத்தில் இணைய கீழே உள்ள Link இனை Click செய்யவும்

அத்துடன், நாடாளுமன்றில் பெரும்பான்மையோரின் நம்பிக்கையை வென்ற மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்ன நாடாளுமன்றுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் 19 ஆவது திருத்தம் உள்ளடக்கப்பட்டு அரசியல் திருத்தம் மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தில் பிரமருக்கு புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரமுடை ஜனாதிபதி முறைமை தொடர்பில் அனைவடனும் இணைந்து தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.