எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் நடக்கவிருப்பது இது தான் - பிரதமர் அதிரடி பேட்டி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் நடக்கவிருப்பது இது தான் - பிரதமர் அதிரடி பேட்டி

விவசாயத்திற்கு தேவையான உரம் இல்லாததால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இலங்கை உணவு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்தி சேனல் ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், இலங்கையின் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது குறித்து தான் வெட்கப்படுவதாக கூறினார்.

இந்த பொருளாதார நெருக்கடிக்கு கடந்த நிர்வாகமே காரணம் எனவும், இன்று இலங்கை வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவி விலக வேண்டுமா என ஊடகவியலாளர் பிரதமரிடம் வினவியதோடு, இதுவரை இரண்டு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதே இளைஞர் சமூகத்தினதும் சில அரசியல் கட்சிகளினதும் கருத்து எனவும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் அவ்வாறான விடயத்தை தெரிவிக்கவில்லை எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.