பிரதமர் பதவியை ஏற்கத் தயார்! எதிர்கட்சி தலைவர் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமர் பதவியை ஏற்கத் தயார்! எதிர்கட்சி தலைவர் தெரிவிப்பு!

நிபந்தனைகளுக்கு உட்பட்டு இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஜனாதிபதியின் கோரிக்கையை கருத்திற் கொண்டு தான் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுவுடன் பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார். 

எவ்வாறாயினும், பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

நிபந்தனைகள் பின்வருமாறு:

1. ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்திற்குள் பதவியில் இருந்து விலகுவதற்கு ஜனாதிபதி சம்மதிக்க வேண்டும்.

2. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இரண்டு வாரங்களுக்குள் அமுல்படுத்த வேண்டும்.

3. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். 

4. நாட்டில் மக்களின் வாழ்வாதாரம் சீரமைக்கப்பட்டு சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டதன் பின்னர் முறையான அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசியலமைப்பின் விதிகளின் கீழ் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.