
எனது மகனுக்கு வெளிநாடு சென்று படிக்கவும், அமெரிக்காவில் விமானி பயிற்சி எடுத்து கொள்ளவும் ஏராளமான பணம் செலவழித்து உள்ளேன். அவரது திருமணத்தை நட்சத்திர ஓட்டலில் மிகுந்த பொருட் செலவில் நடத்தினேன். அவர்கள் வெளிநாட்டு தேனிலவு செல்லவும் தாராளமாக செலவு செய்தேன்.
தற்போது என் மகன் கவுகாத்தியிலும், மருமகள் நொய்டாவிலும் பணி நிமித்தமாக தனித்தனியாக வசிக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றியும் கவலைப்படவில்லை. அதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
எனவே இன்னும் ஒரு ஆண்டில் எங்களுக்கு பேரக்குழந்தை பெற்று தரவேண்டும். இல்லாவிட்டால் மகன், மருமகள் இருவரும் ரூ.5 கோடி (இந்திய ரூபாய்) இழப்பீடு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. வருகிற 15 திகதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. - இந்திய ஊடகம்