பேரக்குழந்தை பெற்று தராவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு: மகன்-மருமகள் மீது பெற்றோர் வழக்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேரக்குழந்தை பெற்று தராவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு: மகன்-மருமகள் மீது பெற்றோர் வழக்கு!

இந்தியா, உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பிரசாத். இவரது மகனுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் பிரசாத் உத்தரகாண்ட் கோர்ட்டில் இழப்பீடு கேட்டு ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மகனுக்கு வெளிநாடு சென்று படிக்கவும், அமெரிக்காவில் விமானி பயிற்சி எடுத்து கொள்ளவும் ஏராளமான பணம் செலவழித்து உள்ளேன். அவரது திருமணத்தை நட்சத்திர ஓட்டலில் மிகுந்த பொருட் செலவில் நடத்தினேன். அவர்கள் வெளிநாட்டு தேனிலவு செல்லவும் தாராளமாக செலவு செய்தேன்.

தற்போது என் மகன் கவுகாத்தியிலும், மருமகள் நொய்டாவிலும் பணி நிமித்தமாக தனித்தனியாக வசிக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றியும் கவலைப்படவில்லை. அதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே இன்னும் ஒரு ஆண்டில் எங்களுக்கு பேரக்குழந்தை பெற்று தரவேண்டும். இல்லாவிட்டால் மகன், மருமகள் இருவரும் ரூ.5 கோடி (இந்திய ரூபாய்) இழப்பீடு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. வருகிற 15 திகதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. - இந்திய ஊடகம்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.