யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்விப் பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர்கள் மாத்திரமே பரீட்சை மற்றும் கற்கைகளுக்கு தோற்ற முடியும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் கூடிய விரைவில் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

கடந்த சில நாட்களாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அரச எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திவருவதுடன், நாட்டில் நிலவும் சீரற்ற  காலநிலையினால் பல்கலைக்கழக மாணவர்களை பாதிக்கக் கூடும் என்ற காரணத்தினால் பல்கலைக்கழகத்தை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

யாழ். பல்கலைகழகத்தின் பேராசிரியர் சத்குணராஜா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.