காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் - வர முடியாவிட்டால் போராட்டத்தை தொடருமாறும் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் - வர முடியாவிட்டால் போராட்டத்தை தொடருமாறும் அறிவிப்பு!

பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போராட்டம் நடத்தும் மக்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“ஆம் அங்கு மக்கள் போராட்டம் நடக்கிறது. தீர்வுகளைக் காண அவர்கள் கலந்துரையாடல்களுக்கு வர வேண்டும்” என்று பிரதமர் இன்று ஒரு நேர்காணலின் போது கூறினார்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடாத பட்சத்தில், தீர்வு கிடைக்காமல் போராட்டம் தொடரும் என்று பிரதமர் கூறினார்.

“இந்த குழுக்களுக்கு நான் பரிந்துரைப்பது அரசாங்கத்துடன் கலந்துரையாட வர வேண்டும். அவர்கள் நம்பக்கூடிய அரசாங்கத்தில் உள்ள சில பிரிவுகளுடன் கலந்துரையாடலாம். இல்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தை தொடரலாம்” என்றார்.

கடந்த வாரம், பிரதமர் ராஜபக்ஷ, காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார், அதை குழுக்கள் உறுதியாக நிராகரித்துள்ளன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.