![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtHDOP3n46K5M39l5KQGXxH0VHc7QqYt5IbnSU4DYEwbo3Z5Zt7WqBLmtgClQose_p6740ks4Fy_97JlA5s2SRJxCkNcxEjcbu7IPleBR8I2qbZikJ2dl3qRJYMzls1l022Lc2Nflz6VfVHk7CN1afV3kXrj6lUS_yvNP72kARbXqrIm_OAkjCygTOvQ/s16000/CD06F0E5-52BD-428D-9F16-91E351E8FB21.webp)
நுவரெலியா பிரதேசத்தில் சுமார் 6 வருடங்களுக்கு பின்னர் கடந்த 28 ஆம் திகதி பிற்பகல் பெய்த ஆலங்கட்டி மழை சுமார் 5 நிமிடங்களுக்கு நீடித்ததாக நுவரெலியா பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா பிரதேசத்தில் கடந்த 28ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்ததாக நுவரெலியா பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பனிமழையினால் நுவரெலியா பிரதேசத்தில் மரக்கறி செய்கை மற்றும் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படும் என மரக்கறி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)