கோரிக்கையை நிராகரித்த பிரதமர்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோரிக்கையை நிராகரித்த பிரதமர்!!


அரசாங்கத்தில் இருந்து விலகிய விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவையை நியமிப்பதற்காக, பதவி விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபகஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவரும் அண்மையில் அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் அவர்களின் கோரிக்கையை நிராகரித்த பிரதமர், நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, ​​41 பேர் கொண்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பிரதிநிதிகள், பிரதமரை நீக்கி புதிய பிரதமரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

அவர்களின் கோரிக்கையையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.