advertise here on top
Join YazhNews WhatsApp Community

றம்புக்கணை பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர் தொடர்பில் வெளியான செய்தி!

றம்புக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த இந்திக பிரசாத் சுபசிங்க என்ற இளைஞர் இன்று (23) வௌ்ளை வான் ஒன்றில் வந்த குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார். 

தர்மபால வீதி, பின்னவலவத்தை, றம்புக்கணை முகவரியில் அமைந்துள்ள குறிப்பிட்ட நபரின் வீட்டுக்கு இன்று காலை பத்து மணியளவில் வௌ்ளை வானில் வருகை தந்த அடையாளம் தெரியாத குழுவினர் அவரைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் ரம்புக்கனை - பின்னவலையை சேர்ந்த இளைஞர் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

அவரை கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.