அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் குடும்பத்துடன் நாட்டை விட்டு சென்றார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் குடும்பத்துடன் நாட்டை விட்டு சென்றார்!


அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இக்குழுவினர் இன்று (04) காலை 08.20 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-102 என்ற விமானத்தில் மாலைதீவு நோக்கிச் சென்றுள்ளனர்.


அவர்கள் சென்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தின் கணனி மற்றும் பாதுகாப்பு கமெரா அமைப்பு சீர்குலைந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தின் ஊடாக விமானத்துக்குள் நுழைவதற்கு குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு படையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.