![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEwn8_IRzBO1_avuPJTC5TcgxO3-ZzYZ2GQDjT37oR5brv8Kk5RmEC7Crq-Ayi8Xn8YTA10Mv5yyRidv3Z7FMYlyLz_NLuta41h4YhuTbJtNllps9GU1WcKW0MrI_c4eIjaWSqVFDJTlh0o9PKLHwl3q2WjCnaI9SGPY3gJb4kguNdThKwLoymzhS8/s16000/gota.png)
பெரும்பான்மை 113 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி குறிப்பிட்டதாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.
இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)