கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜெண்டின் பிணையில் விடுதலை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜெண்டின் பிணையில் விடுதலை!!


நேற்று (14) காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜெண்டின் பிணையில் விடுதலையை சட்டத்தரணிகள் குழு பெற்றுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பொலிஸ் அதிகாரி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

 பின்னர் அவர் விசேட பொலிஸ் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார், இது குறித்த அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையைத் துவங்கி பின்னர் அவரை கைது செய்தது. 

பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமது சேவைகளை இலவசமாக வழங்கிய 12 சட்டத்தரணிகள் குழுவினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார். 

தொடர்ந்தும் பொதுப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக தடுத்து வைக்கப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்டுள்ள பல நபர்களுக்காக சட்டத்தரணிகள் இவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தி தமது சேவைகளை வழங்கி வருகின்றனர். 

மேலும் பொலிஸ் சார்ஜென்ட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், ஒருவரின் கருத்தைக் கூறுவது குற்றமல்ல என்றும், அது ஒரு நபரின் அடிப்படை உரிமை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம் என்றார். 

தற்போதைய நெருக்கடியை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இந்த விடயத்தில் தனது கருத்தை தெரிவிப்பது குற்றமாகாது எனவும் சட்டத்தரணி மேலும் தெரிவித்தார். 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜெண்டிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.