நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குமாறு கோரியே போராட்டம் முன்னெடுப்பு! ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குமாறு கோரியே போராட்டம் முன்னெடுப்பு! ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை!


நுகேகொட ஜூபிலி போஸ்ட்டுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த திட்டமிட்ட தீவிரவாதிகள் குழுவொன்று கலவரமாக நடந்துகொண்டு வன்முறைச் சூழலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இரும்புத் தடிகள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் திட்டமிட்ட தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குமாறு கோரியே இவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 கலவரக்காரர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த முயன்றதாக கைதிகள் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Join our WhatsApp group.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.