![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_9d6rp-t8EIL2LoSrKCE2lKJzdnv6FRhC9EiIyk79ZJU-tMFu5XNFI9MB5wVMq3fmNoE8z9i7sGITwd8LFk4BTdkzHAWwkxhLG_sHJfmohQ5SD6DVmkwow6VEjYfOadCA6adzCXRtxoY/w640-h427/1648777303969646-0.png)
இரும்புத் தடிகள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் திட்டமிட்ட தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குமாறு கோரியே இவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலவரக்காரர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த முயன்றதாக கைதிகள் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Join our WhatsApp group.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO_F_J53UuIgkjf3qbCTn70NKHC1kzeXZzej8p6ZxUI9bksDHnJMtY6FhpBPrXjyFJ1Z0GjcC75SjP02G3wVNRWTFXk4NM2PTmN5Kz7KPDdXIZcx_yJqvH2rPSzihhxI8aGU-XH4SrU78/s16000/1648777299423953-1.png)