இனி இரவு நேரங்களில் ATMகள் செயலிழந்து விடும்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி இரவு நேரங்களில் ATMகள் செயலிழந்து விடும்?


நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக வங்கிகளின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் ஜெனரேட்டர்களை பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றன, ஆனால் அவற்றுக்கான எரிபொருளை பெறுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என தொழிற்சங்க செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறையினால் சில வங்கி நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார். 

இரவில் வங்கிகள் மூடப்பட்ட நிலையிலும் ATMகள் செயல்பட வேண்டும் என்றாலும், தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அது சவாலாக இருப்பதாக அவர் கூறினார்.

இதே நிலை நீடித்தால் மின்சாரம் தடைப்படும் போது ATM இயந்திரங்கள் செயலிழந்து விடும் என அவர் மேலும் தெரிவித்தார். 

சில வங்கிகள் இரவில் ATM இயந்திரங்களை மூடுவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.