100 சதவீத மின்கட்டண உயர்வு?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

100 சதவீத மின்கட்டண உயர்வு?


மின்சார கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயத்தை அறிவிப்பதற்காக ஊடகவியலாளர் மாநாட்டை இன்று (26) நடத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைப்பது தொடர்பில் இதுவரையில் அமைச்சரவையினால் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.