பல ட்ரில்லியன் ரூபா பணத்தினை அச்சிட்ட இலங்கை அரசு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல ட்ரில்லியன் ரூபா பணத்தினை அச்சிட்ட இலங்கை அரசு!

 தற்போதைய அரசாங்கம் அதிகளவான பணத்தை அச்சிட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அசராங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 3043 ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குறித்த காலப்பகுதியில் பணம் 40 வீதத்தினால் அதிகரித்துள்ளது, இது பாரியளவு தொகையாகும்.

சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியாத காரணத்தினால், வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையிலான காலப் பகுதியில் மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளிடமிருந்து 4201 பில்லியன் ரூபா பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை காலம் தாழ்த்திப் பெற்றுக்கொள்வதனால் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.