புதிய அமைச்சர்களுக்கு புதிய சவால் - மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய அமைச்சர்களுக்கு புதிய சவால் - மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு!

தற்போது நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணங்களை உடனடியாக அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கி மீண்டும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

மத்திய வங்கி கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தையும் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரிக்கவும் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதன்படி, மத்திய வங்கி கடன் வசதி வீதத்தை தலா 100 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

இதன்படி, நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் 6.5% ஆகவும், நிலையான கடன் வசதி விகிதம் 7.5% ஆகவும் அதிகரிக்கப்படும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.