எரிவாயு தொடர்பில் மகிழ்ச்சித் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிவாயு தொடர்பில் மகிழ்ச்சித் தகவல்!

நாட்டில் எரிவாயு விநியோகம் இன்று முதல் வழமைக்கு திரும்பும் என அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு எரிவாயுவை ஏற்றி வந்துள்ள கப்பல்களுக்கான நிதி நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, எரிவாயுவைத் தரையிறக்கி, விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படும்.

எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படும் என ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை நேற்று முதல் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.