அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள சுற்றறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள சுற்றறிக்கை!

எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை வழமை போன்று நடாத்திச் செல்வதுடன் தொடர்புடைய சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, கொவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்களை பாடசாலைக்கு அழைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் வழமை போன்று பாடசாலைகளுக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா புதிய சுற்றறிக்கையின் ஊடாக அறிவித்துள்ளார்.

கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகளை நடாத்திச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டால் வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் மேலதிக நடவடிக்கை எடுக்க சந்தர்ப்பம் உள்ளதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.