இலங்கையில் நல்லிணக்கம் சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கி கத்தார் தூதுவர் உடனான கலந்துரையாடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் நல்லிணக்கம் சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கி கத்தார் தூதுவர் உடனான கலந்துரையாடல்!


கத்தார் அரசின் தூதுவர் மாண்புமிகு ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி. அல்-சொரூர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நேற்று (21) கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.


இந்த சந்திப்பின் போது, மனித உரிமைகள் பேரவையில் கட்டார் நல்கிய வலுவான ஆதரவையும் இலங்கைக்கான பச்சாதாப அணுகுமுறையையும் பாராட்டிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கையில் நடைபெற்று வரும் நல்லிணக்கம் சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.  


இலங்கைக்கும் கத்தாருக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பு, உறுதியான நட்புறவு மற்றும் பன்முக உறவுகளை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் பீரிஸ் மேலும் உறுதியளித்தார்.


இரு நாட்டு மக்களினதும் நலனுக்காக இலங்கையுடன் வலுவான பொருளாதார பங்காளித்துவத்தையும் நட்புறவையும் மேம்படுத்துவதற்கு கத்தார் உறுதியளிப்பதாக தூதுவர் சொரூர் உறுதியளித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.