மக்கள் திருப்தியடையும் அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்கள் திருப்தியடையும் அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்!

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அசையாத மக்களுக்கு நம்பிக்கை தரும் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.

சாய்ந்தமருதில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் தலைவர் அனுர திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்த இரு கட்சிகளினால் எமது நாடு முற்றாக அழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று மக்கள் எரிபொருள் எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டைச் சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அவர்களிடையே மகிழ்ச்சியான கூட்டம் ஒன்றும் இருப்பதாகவும், அக்கூட்டமானது, அமைச்சர்கள் உள்ளிட்ட திருடர்களை நம்பியிருக்கும் வணிகக் கூட்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.