நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு பாராளுமன்றத்தில் உணவுக்கு அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு பாராளுமன்றத்தில் உணவுக்கு அனுமதி!


நாடாளுமன்ற உணவகத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய உறவினர்களுக்காக திறக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு நாடாளுமன்றத்தை பார்வையிட அனுமதியளிக்கப்படுவதோடு மதிய உணவையும் எடுத்து செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொவிட்-19 பரவல் காரணமாக நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வையாளர் அரங்கு மூடப்பட்டது. அந்த பார்வையாளர் அரங்கு எந்தவித வெளிநபருக்காகவும் திறக்கப்படவில்லை.


தங்களது நெருங்கிய உறவினர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்துவர அனுமதியளிக்குமாறு கடந்த பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட 80 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயரிடம் எழுத்துமூலம் கோரியிருந்தனர்.


இதற்கமைய, கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை பரிசோதித்து அதற்கான அனுமதியை வழங்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.