இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆறு இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆறு இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆறு இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கைகள் நேற்று (28) பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இலங்கை டிஜிட்டல் அடையாளத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஒன்றை நிறுவுதல் மற்றும் யாழில் வெளியில் உள்ள மூன்று தீவுகளில் கலப்பின மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

மேலும், இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கும், இந்தியாவின் காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் நவீனமயமாக்கப்பட்ட கணினி ஆய்வகங்களை அமைப்பதற்கும் சுஷ்மா சுராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.