மக்கள் இந்த அரசை தூக்கி எறிய வேண்டும்.. என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள்!! -வாசுதேவ

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்கள் இந்த அரசை தூக்கி எறிய வேண்டும்.. என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள்!! -வாசுதேவ


தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு விரோதமானது எனவும், அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல ஆதரவளிக்கக் கூடாது எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தில் இருந்து விலகுவதில் உறுதியாக இருப்பதாகவும் எனினும் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை மக்களுக்கு காட்ட இன்னும் காத்திருப்பதாக அவர் கூறினார்.


தாம் இனி அமைச்சராகப் பதவி வகிக்கப் போவதில்லை எனவும் வேறு ஒருவரை இந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


அரசாங்கம் தனது சொந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு சவால் விடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.