டொலர் ஒன்றிற்கு ரூ. 240 வழங்க அரசு ஆலோசனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டொலர் ஒன்றிற்கு ரூ. 240 வழங்க அரசு ஆலோசனை!

வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்துவதற்கான யோசனை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள மற்றும் இந்து புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கையில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு செலவு செய்ய அதிக பணம் அனுப்புவது வழக்கம்.

எவ்வாறாயினும், இலங்கையில் டொலர் நிலைமையின் தற்போதைய சூழலில், பல வெளிநாட்டு ஊழியர்கள் சட்டவிரோதமான வழிகள் மூலம் தமது பணத்தை இலங்கைக்கு அனுப்புகின்றனர். இந்நிலையால், நாட்டின் அன்னிய கையிருப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்த பட்சம் 240 ரூபாவை செலுத்தினால் வெளிநாட்டு தொழிலாளர்கள் தமது பணத்தை உள்ளுர் வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்ப முடியும் என அமைச்சர் கூறுகிறார்.

இதன்படி, தற்போது ஒரு டொலருக்கு வழங்கப்படும் 10 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை மேலும் 30 ரூபாவால் அதிகரிக்க அமைச்சர் அமைச்சரவைக்கு முன்மொழிவார் என தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது.

நிதியமைச்சானது அரச வங்கிகள் மற்றும் வர்த்தக வங்கிகளுடன் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் டொலர்களை அனுப்புவதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபா டி சில்வா மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.