சிங்கள மற்றும் இந்து புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கையில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு செலவு செய்ய அதிக பணம் அனுப்புவது வழக்கம்.
எவ்வாறாயினும், இலங்கையில் டொலர் நிலைமையின் தற்போதைய சூழலில், பல வெளிநாட்டு ஊழியர்கள் சட்டவிரோதமான வழிகள் மூலம் தமது பணத்தை இலங்கைக்கு அனுப்புகின்றனர். இந்நிலையால், நாட்டின் அன்னிய கையிருப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்த பட்சம் 240 ரூபாவை செலுத்தினால் வெளிநாட்டு தொழிலாளர்கள் தமது பணத்தை உள்ளுர் வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்ப முடியும் என அமைச்சர் கூறுகிறார்.
இதன்படி, தற்போது ஒரு டொலருக்கு வழங்கப்படும் 10 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை மேலும் 30 ரூபாவால் அதிகரிக்க அமைச்சர் அமைச்சரவைக்கு முன்மொழிவார் என தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது.
நிதியமைச்சானது அரச வங்கிகள் மற்றும் வர்த்தக வங்கிகளுடன் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் டொலர்களை அனுப்புவதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபா டி சில்வா மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)