எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த கோரிக்கையை ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
லங்கா ஐஓசி தனது விநியோக நிலையங்களில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எடுத்த தீர்மானத்துடன் ஒப்பிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.32.50 என்றும் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 என நஷ்டத்தில் இருப்பதாக அவர் கூறினார்.
இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெருமவிடம் வினவியபோது, இந்திய எண்ணெய் நிறுவனத்தினால் எரிபொருள் விலையை அதிகரிப்பதன் காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலை தொடர்பில் முடிவெடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் கலந்துரையாடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

