துபாய் செல்வோருக்கான மற்றுமொரு மகிழ்ச்சிச் செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துபாய் செல்வோருக்கான மற்றுமொரு மகிழ்ச்சிச் செய்தி!

ஐக்கிய அரபு இராச்சியம் முழுவதும் விதி மாற்றங்களின் ஒரு பகுதியாக, துபாய் வரும பயணத்திற்கான PCR பரிசோதனையின் கட்டுப்பாடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது

பெப்ரவரி 26 சனிக்கிழமை முதல், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் பயணத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன் நடாத்தப்படும் எதிர்மறை PCR பரிசோதனையை முன்வைக்க வேண்டிய அவசியமில்லை என்று துபாய் அறிவித்துள்ளது.

அதற்குப் பதிலாக, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள், QR குறியீட்டுடன் முழுமையான தங்களின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பயணிகள், விமானம் புறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட எதிர்மறை PCR சோதனையை வழங்க வேண்டும்.

அறிவிக்கப்பட்ட மற்றைய மாற்றங்களுக்கு அமைய, வெளியில் முகக்கவசம் அணிவது இப்போது துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதிலும் கட்டாயம் இல்லை, இருப்பினும் உட்புற மற்றும் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.