அமைச்சர்கள் மாதம் ஒரு முறையாவது சைக்கிளில் பயணம் செய்வதை கருத்தில் கொள்ள வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சர்கள் மாதம் ஒரு முறையாவது சைக்கிளில் பயணம் செய்வதை கருத்தில் கொள்ள வேண்டும்!


அமைச்சரவை அமைச்சர்கள் சைக்கிளில் பணிபுரிய செல்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அமைச்சரவை அமைச்சர்கள் மாதம் ஒரு முறையாவது சைக்கிளில் பயணம் செய்வதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். 

பொதுமக்களின் சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என அமைச்சர் அமரவீர விளக்கமளித்துள்ளார். 

சைக்கிள் வண்டிகளை பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அமைச்சர்களை ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க விரும்புகிறது என்று அவர் கூறினார். 

எவ்வாறாயினும், அமைச்சரவை அமைச்சர்கள் பொது இடங்களில் சைக்கிளில் பயணித்தால் பாதுகாப்பு உட்பட பல இன்னல்கள் ஏற்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விடயம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த அவர், அது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.