157 நாடுகளின் பிரதிநித்துவப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் எட்டாவது செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் கம்போடியா பிரதமர் ஆகியோரால் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டு, உலக அமைதிக்கான உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் சிறப்புரை ஆற்றுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பை ஏற்று இன்று (10) சிங்கப்பூர் எயார்லைன்ஸின் SQ469 விமானம் மூலம் தென்கொரியாவிற்குப் பயணமானார்.
ஆசிய பிராந்தியத்தில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்த அரச தலைவர் என்ற வகையில் ஐக்கிய நாடுகள் சபையாலும் மதிக்கப்படும் மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன தனது விஜயத்தின் போது 2022 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெறவுள்ள அமைதி தொடர்பான உலக உச்சி மாநாட்டில் உரையாற்றுவதுடன் பல அரச தலைவர்களையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளார். (யாழ் நியூஸ்)