இறந்த பிச்சைகாரர் ஒருவரிடம் இருந்து லட்சக்கணக்கான பணம் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இறந்த பிச்சைகாரர் ஒருவரிடம் இருந்து லட்சக்கணக்கான பணம் மீட்பு!


நகர பகுதிகளில் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்த பிச்சைக்காரர் ஒருவர் நேற்று (10) திடீரென உயிரிழந்துள்ளதுடன் அவரது கால்சட்டைப் பையில் இருந்து பெருந்தொகை பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் நபர் ஹக்மன பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவரது கால்சட்டை பைகளில் கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 69 வயதான ஹக்மான கொங்கல. தி. விமலதாச என்ற பிச்சைக்காரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தான் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் உள்ள மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தனியாக வசித்து வந்த இவர், இதற்கு முன்பு ஹெவிசி இசைக்கருவி வாசிப்பவராக பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இறந்தவருக்கு உறவினர்கள் யாரும் இருப்பதாக தகவல் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.