அதிவிசேட வர்த்தமானியினை வெளியிட்ட ஜனாதிபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிவிசேட வர்த்தமானியினை வெளியிட்ட ஜனாதிபதி!


அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பல்வேறு துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து அதனை வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

2268/03 என்னும் இலக்கத்தை கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

மின்சாரம் வழங்கல், வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உபசரிப்பு மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பில் செய்யப்பட வேண்டிய அனைத்து அவசிய அல்லது தேவைப்படும் சேவைகள்/ பணிகள் என்பவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்பத்பட்டுள்ளன.

நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.