மன்னிப்பு கோரிவிட்டு ஆஸ்திரேலியா செல்ல தயாராகும் ரஞ்சன்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மன்னிப்பு கோரிவிட்டு ஆஸ்திரேலியா செல்ல தயாராகும் ரஞ்சன்?


கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படாதது குறித்து கவலையில் இருப்பதாக சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இம்முறை சுதந்திர தினத்தில் தான் விடுதலை செய்யப்படாதது தொடர்பில் அவர் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தனது வாய் குறித்து வெட்கப்படுவதாகவும் கூறிய கருத்துக்களுக்காக கவலையை வெளியிட்டு, மன்னிப்பு கோர தயாராக இருப்பதாகவும் அண்மையில் தன்னை பார்க்க சென்றிருந்தவர்களிடம் ரஞ்சன் கூறியுள்ளார்.

இதனிடையே ரஞ்சன் ராமநாயக்க சிறையில் இருந்து விடுதலையானால், மீண்டும் அரசியலில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக பேசப்படுகிறது. அவர் அவுஸ்திரேலியாவுக்கு சென்று நீண்டகாலம் தங்கி இருக்க தயாராகி இருப்பதாகவும் தெரியவருகிறது.

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக இவ்வாறான செய்தி வெளியாகியுள்ள நிலையில், அவர் தரப்பில் இருந்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.