வாரத்தில் வேலை நாட்களை குறைக்க ஆலோசனை - மேலும் பல முன்மொழிவுகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாரத்தில் வேலை நாட்களை குறைக்க ஆலோசனை - மேலும் பல முன்மொழிவுகள்!

டொலர் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தடுப்பதற்கான யோசனையொன்றை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அஜித் நிவாட் கப்ரால் இந்த யோசனையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) கடனுதவியை தொடர்ந்தும் வழங்கினால் இரண்டு வங்கிகளும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பது கடினமாகும் என்பதால், அதற்கான கடனை உடனடியாக நிறுத்தவும் மத்திய வங்கி முன்மொழிந்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுமார் ரூ. 560 பில்லியன் (US $ 280 மில்லியன்) இரண்டு அரசு வங்கிகளுக்கும் செலுத்த வேண்டியுள்ளது. 

இந்த நிலையில், CPC க்கு மேலும் கடன் வழங்குவது இரண்டு வங்கிகளின் வீழ்ச்சிக்கும் பொருளாதாரத்தில் கடுமையான நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்பதால் மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.

எரிபொருள் விற்பனையில் CPC இற்கு ஏற்படும் இழப்பை குறைப்பதற்காக எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்குமாறும் மத்திய வங்கி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது.

மேலும் வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை 4 ஆக குறைக்கவும், ஒரு நாளுக்கான வேலை நேரத்தை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டது.

அதன்படி, வேலை நேரத்தை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை மாற்றி அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்குள் பணிபுரியும் ஊழியர்கள் காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், முன்கூட்டியே வீடுகளுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்குமாறும் மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, நெருக்கடி மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், ஒரு பெரிய ஊடகப் பிரச்சாரத்தையும் அந்த முன்மொழிவு கோருகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.