எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் - அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் - அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

சில மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பில் தன்னால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அவ்வாறு கூறியதன் பின்னர் மக்களை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், சில மாதங்களுக்கு முன்னர் கூறியது தற்போது நிஜமாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றோல் மற்றும் டீசலை நட்டத்தில் விற்பனை செய்வதாகவும், திறைசேரியிலிருந்து எவ்வித மானியமும் பெறுவதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

விலையை அதிகரிக்காவிட்டால் எரிபொருளை கொள்வனவு செய்ய பணமில்லாமல் போகும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.