ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!


ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக்களுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அது சார்ந்த சாட்சியங்கள் உள்ளடங்கிய சகல அத்தியாயங்களும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


குறித்த ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களுடன் கூடிய 88 அத்தியாயங்களைக் கொண்ட முழுமையான அறிக்கை ஜனாதிபதி சட்டத்துறை பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் இன்று (22) நாடாளுமன்றத்தில் வைத்து சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.


ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டதுடன், சட்ட ரீதியான காரணங்களுக்காக அதனுடன் இணைந்த சாட்சியங்கள் இதுவரை வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.


ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக ஆய்வுக்காகவும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.