இலங்கை மக்களின் நிலை குறித்து உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு கவலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மக்களின் நிலை குறித்து உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு கவலை!


பிரதான உணவு வகைகளின் சடுதியான விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையர்களின் உணவு பழக்கவழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் குறித்த அமைப்பின் உலகளாவிய தகவல் மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தானியங்கள் மற்றும் ஏனைய பிரதான இறக்குமதி உணவுகளின் விலைகள் கடந்த செப்டம்பர் முதல் அதிகரித்ததுடன், இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் அதியுட்ச விலை அதிகரிப்பை எட்டியுள்ளது.


டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி இதற்கான பிரதான காரணியாகும்.


இவ்வாறான விலை அதிகரிப்பு காரணமாக குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு உணவு கிடைப்பதில் பாரிய எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


குறித்த குடும்பங்கள் உணவு நுகர்வினை குறைத்துள்ளதுடன், போசனை குறைந்த உணவினை நாடிவருகின்றனர்.


இது அவர்களது உணவு பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் போசனை ஆகியவற்றில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.