சமுதித்த தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமுதித்த தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம், சாட்சி மற்றும் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, ஊடகவியலாளர் சமுதித்தவின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இன்றும் சிசிரிவி காணொளி காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இதுவரையில் 86 சிசிரிவி காணொளி காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா வெகுமதியை ஹிரு ஊடக வலையமைப்பு தீர்மானித்துள்ளது.

தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களில் இருந்து, சில கைரேகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்தக் கைரேகைகள் தொடர்பான விசாரணை அறிக்கையை, குற்ற ஆவணக் காப்பகத்தில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேநேரம், குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிக் கட்சிகள் உட்பட மேலும் சில விஞ்ஞான ரீதியான சாட்சிகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.