கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரது உடலில், வைரஸ் 05 நாட்களுக்கு மாத்திரமே செயற்பாட்டில் இருக்கும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் நேற்று (09) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
சர்வதேச ஆய்வுகளின் படி கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரது உடலில், ஒமைக்ரொன் உள்ளிட்ட வைரஸ் திரிபுகள் பெரும்பாலும் 5 நாட்களுக்கே செயற்பாட்டில் இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் தடுப்பூசி வழங்கப்பட்ட காரணிகளை கருத்திற்கொண்டே 14 நாட்களாக இருந்த தனிமைப்படுத்தல் காலத்தினை புதிய சுகாதார வழிகாட்டியில் 07 நாட்களாக குறைத்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.