சமைத்துக் கொண்டிருந்த 3 பிள்ளைகளின் தந்தையான 74 வயது நபர் தீ பிடித்து பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமைத்துக் கொண்டிருந்த 3 பிள்ளைகளின் தந்தையான 74 வயது நபர் தீ பிடித்து பலி!


இன்று (14) காலை 8.00 மணியளவில் உணவகம் ஒன்றின் சமையலறையில் ஒருவர் தீ காயங்களுக்கு உள்ளாகி இறந்துள்ளதாக லிதுல பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் லிதுல லாமரியர் தோட்டத்தைச் சேர்ந்த 74 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மருதைவீரன் பெருமாள் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவர் லிதுலையில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரராக பணிபுரிந்து வந்த நிலையில், அதிகாலை வழமை போன்று உணவகத்திற்கு வந்த குறித்த நபர் சமைத்துக்கொண்டிருந்த போது அவரது சட்டையில் தீ பிடித்து உணவகத்தின் மேல்மாடியில் உள்ள சமையலறையில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிதுலை பொலிஸார் தெரிவித்தனர். 

தீ பரவும் போது அங்கு எவரும் இருக்கவில்லை எனவும், தீயினால் இந்த சமையல்காரர் உயிரிழந்துள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.