சவூதி விமான நிலையம் மீது தாக்குதல்; இலங்கையர் உட்பட 12 பேர் பாதிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சவூதி விமான நிலையம் மீது தாக்குதல்; இலங்கையர் உட்பட 12 பேர் பாதிப்பு!


சவூதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் வியாழன் அன்று வான் பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்ட வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தின் துண்டுகளால் 12 பேர் காயமடைந்தனர்.


ரியாத் - எல்லைக்கு அருகில் உள்ள யேமன் கிளர்ச்சியாளர்களின் விமான நிலையத்தை குறிவைத்து சவுதி அரேபியப் படையினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை ஆகாயத்தில் வெடிக்கச் செய்ததில், விமானதாக்குதலின் போது குப்பைகள் விழுந்ததில் இவ்வாறு காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


நண்பகல் நேரத்தில் ட்ரோன் தாக்குதலில் இருந்து துண்டுகள் விமான நிலைய மைதானத்திற்குள் விழுந்து சில கண்ணாடி முகப்புகள் சேதமடைந்தன.


அதன் சிதறல்கள் காரணமாக  இலங்கையர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.


இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு  காயமடைந்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.