கத்தாரில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர் இலங்கையர் என உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தாரில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர் இலங்கையர் என உறுதி!


கத்தாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் இலங்கையர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.


அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு கத்தார் நாட்டு இளைஞர் ஒருவரிடம் அடையாள அட்டையை கோரியமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


சம்பவத்தையடுத்து சம்பவ இடத்திற்கு திரும்பிய இளைஞர் அங்கிருந்த இரு பாதுகாப்பு அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.


அதில் ஒருவர் மரணித்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார் என முன்னைய செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். இறந்தவர் இலங்கையர் என்பது பின்னர் தெரியவந்தது. இருந்தபோதிலும் அவரின் தனிப்பட்ட விபரங்கள் ஏதும் இன்னும் வெளிவரவில்லை.


துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)


முன்னைய செய்தி: https://bit.ly/32Bl7TC


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.