முஸ்லிம் கவுன்ஸிலின் பொருளாளர் பாரிபவுஸ் காலமானார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் கவுன்ஸிலின் பொருளாளர் பாரிபவுஸ் காலமானார்!


 
முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸிலின் பொருளாளரும், சமூக சேவையாளருமான பாரி பவுஸ் (70) ஞாயிறன்று (9) காலமானார்.

இவரது மறைவு குறித்து, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் சிறிலங்காவின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஸ்பீட் பிளம்பர் நிறுவனத்தின் உரிமையாளரான இவர், ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம் கவுன்ஸிலின் பொருளாளராகப் பணிபுரிந்து வந்தார். முஸ்லிம் கவுன்ஸிலின் பணிகளுக்காக கொழும்பு ஐந்தில் உள்ள இவரது வீட்டையே வழங்கியிருந்தார். முஸ்லிம் கவுன்ஸிலின் வளர்ச்சியில் இவரும் இவரது துணைவி ஹாஜியானி சாதிகாவும் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

ஹவ்லொக் டவுன் பள்ளிவாசலின் தலைவராகப் பணிபுரிந்த இவர், வெள்ளவத்தை இஸ்லாமிய கற்கை நிலையத்தில் (சி.ஐ.எஸ்) கடந்த பத்து வருடங்களாகப் பணிபுரிந்து வந்தார்.

இவரது மறைவு, தன்னலம் பாராது நாட்டுக்கும், சமூகத்துக்கும் தொண்டாற்றிய சிறந்த மகனை இல்லாமல் செய்துள்ளது. இவரது மறுமைக்காகப் பிரார்த்திப்பதோடு, இவரது பிரிவினால் வாடும் மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.