நீதிமன்றத்தில் ஆஜராகாது மாட்டிக்கொண்ட சம்பிக ரணவக்க!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீதிமன்றத்தில் ஆஜராகாது மாட்டிக்கொண்ட சம்பிக ரணவக்க!

கடந்த 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினருக்கு கடந்த 10 ஆம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவருக்கு விஷேட சுகயீனம் இருப்பதாக தெரியவரவில்லை எனவும் கொழும்பு பிரதான நீதித்துறை வைத்திய அதிகாரி இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு தொடர்பிலேயே நீதிமன்ற மருத்துவ அதிகாரியினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.