இலங்கை வருபவர்களுக்கான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை வருபவர்களுக்கான அறிவிப்பு!

இலங்கைக்கு செல்ல எதிர்பார்க்கும் சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை விசாக்களை வழங்கும் பயண மற்றும் குடிவரவு முகவர் என கூறி இணையத்தில் கிடைக்கும் போலி தளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு SLTDA விடுத்துள்ள அறிவிப்பில், இலங்கைக்கு வரக்கூடிய பயணிகளை வலியுறுத்தியுள்ளது.

eta.gov.lk/slvisa என்பது இலங்கைக்கு செல்வதற்கான விசா நோக்கங்களுக்கான ஒரே அதிகாரப்பூர்வ தளம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.

2021 டிசம்பரில் இலங்கை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பைக் கண்டுள்ளது, கொவிட் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்த நாடு எதிர்பார்க்கிறது.

SLTDA அறிக்கையின் படி, டிசம்பர் 1 முதல் 26 வரை மொத்தம் 69,941 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது நவம்பர் 2021 உடன் ஒப்பிடும்போது 36% அதிகரிப்பாகும். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.