டொலர் பிரச்சினை; வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களின் துயர நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டொலர் பிரச்சினை; வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களின் துயர நிலை!


வெளிநாடுகளில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோர்கள், அவர்களுக்கு தேவையான பணத் தொகையை அனுப்ப முடியாமல் கடும் சிரமத்தில் உள்ளனர்.

வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்காக பணம் இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு லட்சத்துக்கும் அதிகமான இலங்கை மாணவர்கள் தற்போது வெளிநாட்டில் கல்வி பயின்று வருவதாகவும், அவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கான பெரும்பாலான பணம் அவர்களின் பெற்றோரிடம் இருந்து அனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் உள்ளூர் வங்கிகளில் டொலர்கள் இல்லாத காரணத்தால் தமது குழந்தைகளுக்கு பணம் அனுப்ப முடியாமல் பெற்றோர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.